Tuesday, March 8, 2016

A TAMIL CHRISTIAN CHURCH IN SCARBOROUGH

As Apostle Paul writes to Timothy “O Timothy, keep that which is committed to thy trust” (I Timothy 6: 20)”- Our main goal is to be faithful to God in what has been entrusted to us, and to be a part of fulfilling His eternal purpose, by doing His will in our lives.

Jesus Said: “He that gathereth not with me scattereth abroad.” So gather His people with Him and so that they can abide in Him and bear good fruits.


We educate and encourage believers to desire in “Till we all come in the unity of the faith, and of the knowledge of the Son of God, unto a perfect man, unto the measure of the stature of the fullness of Christ:

That we henceforth be no more children, tossed to and fro, and carried about with every wind of doctrine, by the sleight of men, and cunning craftiness, whereby they lie in wait to deceive;
“But speaking the truth in love, may grow up into him in all things, which is the head, even Christ: (Ephesians 4:13-15)

With love, we emphasize and remind all the believers “For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?” So guard everything that is bestowed to your trust, and explain the importance of good governance of our elect and calling.


gtachurchnet.ca 

Monday, February 29, 2016

Be Strengthen by God's Grace - தேவ கிருபையில் பெலப்படு

பிரதான வாசகம்: ரோமர் 15:33

ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு (2 தீமோத்தேயு 2:1)

 “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்: மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்: ஆகிலும் பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்: அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும் போகவில்லை. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்: அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள்.” என்று கர்த்தர் ஒரு உவமையைச் சொன்னார்.

இன்றைய நாட்களிலே பலருடைய வாழ்க்கை, இரண்டாவது மகனுக்கு ஒத்ததாக இருக்கின்றது. “ஆம் ஐயா செய்கின்றேன்” “நீர் சொல்வதை கேட்கிறேன்” என்று கூறிவிட்டு, அதை அவர்கள் வாழ்க்கையிலே செய்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் பிதாவின் சித்தத்தை செய்யாத வர்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறினார். 

எங்கள் மீது பொல்லாப்பு வரும் முன்பதாக நாங்கள் கணக்கு பார்க்கவேண்டும். கர்த்தர் என்னிடம் என்னத்தைத் தந்தார்? என்னத்தை நான் செய்திருக்கிறேன்? கர்த்தருக்கு முன்பாக நான் எவ்விதமாக காணப்படுகின்றேன்? 

ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து தேவனால் தூக்கி உயர்த்தப்பட்ட சிலர், தங்கள் வாழ்க்கையில் கணக்குப்பார்க்க தவறினதினால், அவர்களுடைய வாழ்க்கையின் பின்பகுதி பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது. ஆரம்பத்திலே தேவன் செய்த காரியங்களை அறிக்கை பண்ணி, தேவனுக்கு நன்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள், காலங்கள் சென்றபின், தங்களை உயர்த்திய தேவனை மறந்து, மற்றவர்களின் பார்வைக்கு தாங்கள் பெரியவர்கள் என்றும் பரம்பரை பரம்பரையாக தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெருமையாக பேசி, தேவனை விட்டு விலகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தார்கள். தேவனுடைய பிள்ளை என்ற பட்டம் (வவைடந) அவர்களிடம் உண்டு, ஆனால் தேவனோ அவர்களோடு இல்லை. இப்படியாக ஆரம்பத்தில் தேவனால் வழிநடத்தப்பட்ட ஊழியர்களும் கூட பிற்காலத்தில் மனிதர்கள் பார்த்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் விழுந்து போயுள்ளார்கள். இவர் எல்லாற்றையும் நன்றாக செய்தாரே? ஏன் இப்படியாக போய்விட்டார் என்று கேள்விகளை கேட்பார்கள். ஏன் இப்படியாக மனிதருடைய வாழ்க்கையில் நடைபெறுகின்றது? ஏனென்றால் தேவன் அவர்களோடு இல்லை, அவர்களைவிடடு விலகிச் சென்றுவிட்டார்.

சவுல் ராஜாவின் வாழ்;க்கையும் இதற்கொத்ததாக இருந்தது. தேவனை விட்டு தன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினான். இதனால் தேவன் சவுல் ராஜாவை தள்ளிவிட்டார். 

இப்படியாக இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளும், பசும் பொன்னைப் போல இருக்கின்றார்கள், காலப்போக்கில் இவர்கள் தேவனை விட்டு விலகிச் செல்கின்றார்கள். காலப்போக்கில் இவர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

கர்த்தரோடு கூட என்னுடைய வாழ்க்கை எவ்விதமாக இருக்கின்றது என நாங்கள் கணக்குப்பார்க்க வேண்டும். எந்த நிலையில் இருந்து கர்த்தர் எங்களை அழைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. தேவனால் வந்த எந்த காரியமும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். தேவ காரியத்திற்கு விரோதமான எந்த ஒரு காரியமும், கொஞ்சமும் எங்கள் வாழ்க்கையில் இருக்க முடியாது. இப்படியாக தேவ சித்தத்தை நிறைவேற்றி, கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும்

Pastor Ranjit Constantine
A Tamil Church in Toronto
Grace Tabernacle Apostolic Church


இந்த செய்தியை முழுமையாக கேட்க 

Thursday, February 18, 2016

Lost Way by Pastor Ranjit Constantine (பாதை தவறிய மனிதன்)

பாதை தவறிய மனிதன்

பொதுவாக எவரும் தமது வாழ்வில் பாதை தவறுவதை விரும்புவதில்லை. பாதை தவறுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அடிப்படை என்னவென்றால் ஒருவர் எவற்றை தனது வாழ்வில் முன்னுரிமைப் படுத்துகின்றார் என்பதே. இதை அவர் தனது சொந்த விருப்பு என்று கூறலாம், ஆயினும் அதன்  முடிவானது அவர் தெரிந்து கொண்ட வழியை விபரிக்கும்.

பரிசுத்த வேதாகமத்திலே, ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து வாழ்பவர்களைக் குறித்து  கூறப்ப ட்டுள்ளது. வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். ஓருவன் தான் சென்றடைய வேண்டிய இடத்தைவிட்டு விலகிச்செல்வானானால், அவன் பாதை தவறிய மனிதனாகின்றான்.
பாதை தவறிய மனிதன் தொலைந்து போகின்ற வழியில் செல்கின்றான். தனது வாழ்வில் நிம்மதியை இழந்து போகின்றான். அவனைச் சார்ந்து இருப்போருக்கும் அவனை நேசிப்போருக்கும் அவன் மனமடிவாகவும் வேதனை உண்டுபண்ணுபவனாகவும் இருக்கின்றான்.

இயேசு கிறிஸ்து சொன்னார்; (லூக்கா 15:4-7)

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவை களில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்கும ளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதihயும் அயலகத்தா ரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித் தேன் என்னோடுகூடச் சந்தோ~ப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமா ன்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்பு கிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோ~ம் உண்டாயி ருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

காணாமற் போன ஆட்டைப்போல பாதை தவறியவர்களை அன்போடு தேடி, விடுதலையாக்கி, அவர்களை பாதுகாப்பான ஆசீர்வாதமான இடத்துக்கு கொண்டு வரும்படி இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவர் அதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார்.

ஓருவன் தன் ஆத்துமாவைக் குறித்து அக்கறையற்றவனாய் இருப்பானா னால் அவன் ஆத்துமா இருளடைந்து நித்திய மரணத்தை நோக்கி செல்லுகிறதாயுள்ளது. அத்தகைய மனிதன் தொலைந்த ஆட்டைப்போல பாதை தவறிச் செல்பவனாக இருக்கின்றான். ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி வாழ்ந்து தகாத காரியங்களினால் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்கின்றான்.

பாவம் வஞ்சனையுள்ளது. வெளித் தோற்றத்திலே அது கவர்ச்சியா யுள்ளது. ஆனால் அதன் முடிவோ கசப்பானது. தேவன் பரிசுத்தர். பாவ செயல்கள் மனிதனை தேவனிடத்தில் இருந்து பிரிக்கின்றது. ஆம், பாவ த்தின் சம்பளம் மரணம். அந்த மரணம் நித்தியமானது. தேவனுடைய கிருபை வரமோ நித்தியஜீவன்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

நீ போகின்ற உனது வழியை நீ அறிந்துள்ளாய். அதை நீ இதுவரை அறியாதிருந்தால் சற்று தரித்திருந்து அதை அறிந்து கொள். இவ்வு லகில் எமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்நாட்கள் மிகவும் ஆசீர்வா தமான பொக்கிஷம். அதை பயனுள்ளதாய் காத்து வாழ்வதே புத்தி யுள்ள வழியாகும். ஓருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டிருந் தாலும் அவன் நித்திய நரகத்தை நோக்கி செல்பவனாக இருப்பானெ ன்றால் அதினால் என்ன பயன்?

இன்று உனது தேவை என்ன. இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது வாழ்க்கை சரியான பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உமது பாதையில் நடத்தும்; என்று கூறுவாயாக.

இயேசு சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”


Pastor Ranjit Constantine
Grace Tabernacle Apostolic Church

gtachurchnet.ca

Saturday, February 13, 2016

Tamil Bible Study Worthiness and Status - தகுதியும் தராதரமும்

தகுதியும் தராதரமும்   

உலகிலே மனிதர்கள் வேறுபட்ட, பல தரப்பட்ட தகுதிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகுதிகள் ஓருவரின் திறமைகள், கல்வி அறிவு, செல்வம் என பல காரணிகளில் தங்கியுள்ளது. ஓருவரிடத்தில் ஒரு வேலையை ஒப்படைக்கும் முன் அதை செய்யத் தக்க அறிவு, தகுதி அவருக்கு உள்ளதா என்று அறிவது அவசியமே. இத்தகுதிகள் இவ்வுலக வாழ்வில் தராதரங்களை உண்டுபண்ணு கின்றது. நாளடைவில் இவைகளே ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினை களையும் ஏற்படுத்துகின்றது. 

பல காலமாக சமூதாயத்தினால் தாழ்த்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒருவரை தேவ ஊழியர் ஒருவர் சந்தித்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவருக்கு கூறினார். அவரும் சந்தோஷமாய் தேவனோடு வாழும் வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டார். தேவ ஊழியரும் அவரைக்  தேவாலயத்தில் வந்து தேவனை ஆராதிக்கும் படி கேட்டுக்கொண்டார். ஞாயிற்றுக் கிழமை அன்று  தேவாலயத்திற்கு சென்ற அவர்; தேவால யத்திற்கு வெளியே தெருவோரமாக முழங்கால் படியிட்டு ஆராதித்தார். இதை அறிந்த தேவ ஊழியர் விரைவாக தேவாலயத்திற்கு வெளியே அவரிடத்தில் வந்து அவரை உள்ளே வந்து மற்றவர்களோடு சேர்ந்து ஆராதிக்கும்படி கூறினார். ஆனால் அவரோ, தான் உள்ளே வர தனக்கு அதற்குரிய தகுதியோ தராதரமோ இல்லை என்றும் தான் வெளியிலே இருந்து ஆரதிப்பதாகவும் கூறினார்.  அந்த தேவ ஊழியரோ மிகவும் வருந்தி அவரை அழைத்தார். இறுதியில் தேவாலய முற்றம்வரைக்கும் வருகிறேன் என்று சொல்லி உள்ளே வந்து முற்றத்தில் முழங்கால் படியிட்டு ஜெபித்தார். சமூதாய அந்தஸ்து என்ற பிரமை அவரை கட்டிப்போட்டதினால் அவர் அவ்விதமாக நடந்து கொண்டார்.

இந்தப் பிரமையானது அவரைமட்டுமல்ல பலரை பல வேறுபட்ட நிலைகளில் கட்டிவைத்துள்ளது.

பரிசுத்த வேதாகமத்திலே இயேசு கிறிஸ்து ஒருமுறை யூதர்களுடன் உரையாடிய போது நடந்தவற்றைப் பார்ப்போம்.

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணிய சிலihக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்: 

இரண்டு மனு~ர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்கு போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனு~ரைப்போலவும், இந்த ஆயக்காரனை ப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்ததிரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கின்றேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசம பாகம் செலுத்திவருகின்றேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். 

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பி ப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 

பரிசேயர் எனப்படுவோர் யூத சமூகத்திலே உயர் நிலையிலுள்ள பக்தி மான்கள் என்றும் ஆயக்காரர்கள் உரோம அரசிற்கு வரிசேர்ப்ப வர்களும் பாவிகளும் என்று தரப்படுத்தப்பட்டவர்கள். இயேசு சொன்னார், அத்தரப்படுத்துதல் தேவனுக்குரியதல்ல. இவ்வுலகத்தில் தகுதி, மேன்மை எனப்படுவது சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக அழுக்கும் குப்பையுமாயுள்ளது. அவற்றினால் எவரும் தேவனுக்கு முன்பாக தகுதி அடைவதில்லை. அவை இவ்வுலக வாழ்வோடு மறைந்து போகும். ஓருவனுக்கு தேவனால் உண்டாகும் தகுதியானது இவ்வுலகிலும் மோட்சத்திலும் அவனை மேன்மை ப்படுத்தும். அந்தத்தகுதி என்னவென்றால் தேவன் ஓருவனுடைய பாவங்களை மன்னித்து அவனை நீதிமானாக்குவதே. அப்போது அவன் தேவனுடையவனாகின்றான். தேவனும் அவனை ஆசீர்வதித்து நடத்துவார். 

பிரியமான சகோதரனே, சகோதரியே!

நீ தேவனால் தகுதி பெற்று அவருடையவனாய் அவருடையவளாய் வாழவேண்டும், இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது வாழ்க்கை யானது தேவனுக்கேற்றதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக் கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.”


போதகர் ரஞ்சிற் கொன் ஸ்ரன்ரைன் 


Pastor Ranjit Constantine
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH



Saturday, February 6, 2016

Wednesday, February 3, 2016

Tuesday, February 2, 2016

Tamil Christian Church in Toronto

Welcome to Grace Tabernacle Apostolic Church!

We are Tamil community based Pentecostal Christian Church located in Toronto, Ontario, Canada. All the are conducted in both; Tamil and English languages. Service is conducted at 207 Silver Star Blvd., Scarborough, Ontario.

For more information on our fundamental beliefs visit our website.


காலங்கள் - Time



மனிதர்களிடையே விஞ்ஞான அறிவு மிகவும் வளர்ந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியானது எல்லா துறைகளிலும் மிக வேகமாய் வளர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் எத்துறையில் தங்கள் கல்வியைத் தொடர்வது என்பது மிக முக்கிய மான ஓர் தீர்மானமாகக் காணப்படுகின்றது. இன்று பல துறைகளில் கல்வி அறிவு வளர்ந்துள்ளதே அதற்குக் காரணமாயுள்ளது. நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் புதிய புதிய ஆராய்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அகழ்வாராய் ச்சியினால் பல கடந்த கால நிகழ்வுகளையும் அவற்றின் காலங்க ளையும் கணித்துக் கூறுகின்றனர். தற்போதுள்ள காலத்தைக் குறித்து பேசுவோமானால், பலர் சலித்துக்கொள்ளும் சம்பவங்கள் அநேக முண்டு. கொலைகள், கொள்ளைகள், அழிவுகள், யுத்தங்கள் என பல துயர்கள் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன. 

பரிசுத்த வேதாகமத்திலே காலங்களைக் குறித்து சொல்லப்பட்டவைக ளைப் பார்ப்போம். 

காலத்தை உணராதவர்கள்

பரிசேயர் சதுசேயர் எனப்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்து அவரைத் தாங்கள் அறிந்து கொள்ளத்தக்கதாக வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் கேட் டார்கள். அவர்கள் மத்தியிலே அநேக காரியங்களை கர்த்தர் செய்திரு ந்தும் அவரை விசுவாசிக்க மனதில்லாமல்; அவihச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக் குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 

அவர்களுக்கு இயேசு பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வான மிட்டிருக்கிறது, அதனால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதய மாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றை க்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்கா ரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? (மத்தேயு 16)   

கடந்த காலங்களை ஆராய்கிறோம், அவற்கைக் குறித்து பேசுகிறோம். ஆனால் இப்போது நடைபெறுபவைகள் ஏன் நடைபெறுகின்றன?

ஒருமுறை கர்த்தரின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து ஜெருசலேம் தேவாலயத்தைக் காண்பித்து அதைக்குறித்துப் பேசினார்கள். அவை மிகப் பெரிதான பளிங்குக் கற்களினால் கட்டப்பட்டிருந்தது. (மத்தேயு 24) இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீ~ர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 

பின்பு, இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீ~ர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள். 

எப்போது ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்படும்? ஆம் அது இடிக்கப்பட்டது. கர்த்தர் சொன்னபடி காலம் நிறைவேறியது. சீஷர்கள், இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்றும் கேட்டார்கள் அதற்து அவர்:

“ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகih வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக் கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேத னைகளுக்கு ஆரம்பம்.” 

ஆம், கர்த்தர் சொன்ன காலம் சமீபமாயுள்ளது.  

பிரியமான சகோதரனே, சகோதரியே!

புதியதோர் சந்ததி வருகின்றது. மற்றோர் சந்ததி உலகத்தை விட்டு செல்கின்றது. மனிதன் இவ்வுலகில் வாழ்நாள் குறுகினவனாயுள்ளான். காலங்களும் கடந்து போகின்றது. தேவாதி தேவனை சந்திக்கத்த க்கதாக உனது வாழ்க்கை இருக்கின்றதா? உனக்கு ஆறுதல் தந்து உன் பாவங்களை மன்னிக்கும் இயேசு உன்னைத் அதற்குத் தகுதிப் படுத்துவார். நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளை யாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார்:

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”


கிறேஸ் ற்ரபனக்கல் அப்போஸ்தல சபை
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


gtachurchnet.com



சோர்ந்து போகாதே! Be of good courage!


சில வேளைகளிலே, இந்த உலகிலே எங்களை அழுத்தும் சுமைகளும், பற்றும் பாரங்களும், தேவன் எங்களை மறந்தாரே, கைவிட்டாரோ என்று சிந்திக்க தூண்டலாம். 

அந்த வேளைகளிலும் வேதத்தை ஊக்கமாக படியுங்கள், கருத்தோடு ஜெபம் பண்ணுங்கள். வாக்குத்தத்தங்களை அறிக்கையிட்டு, அவைகளை ஆசீரவர்தங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். 

பரிசுத்த வேதாகமத்திலே, தேவனுடைய என்றும் மாறாத ஜீவனுள்ள வார்த்தைகளை விசுவாசத்தோடு பற்றிக் கொள்ளுங்கள்.

வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

“சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள். உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.” ஏசாயா 49:13-19)

“யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.  இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40: 27-31)

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” (எபிரெயர் 12:1)

சோர்வுக்கு இடங்கொடாமல் விசுவாசத்தோடு ஒடுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் வாக்களித்ததை நிச்சயமாக நிறைவேற்றுவார். ஆமேன்!


கிறேஸ் ற்ரபனக்கல் அப்போஸ்தல சபை
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH



Thursday, January 28, 2016

சபையின் விசுவாச கோட்பாடுகள் - மூல உபதேசம்

அபோஸ்தல உபதேசம் 

1. தேவத்துவத்தின் ஒருமைப்பாடும் திரித்துவத்தின் உண்மையும் மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒரே தன்மையுடையவராய் திரியேகத்துவத்திள் இசைந்திருத்தல் (எண்ணாகமம் 6:22-27, ஏசாயா 6:3, மத்தேயு 3:16-17, மத்தேயு 28:19, யோவான் 15:26, யோவான் 5:7, லூக்கா 2:26, யோவான் 1:3, யோவான் 5:18-19, யோவான் 20:28, ரோமர் 8:9)

2. மனித சுபாவத்தின் முழுப்பாவத்தன்மை, மனந்திரும்பி மறுபிறப்பு அடைவதின் அவசியம், மனந்திரும்பாதவனின் இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்பு. (சங்கீதம் 51:5, மத்தேயு 25:41-46, யோவான் 3:3, 5:19, அப்போஸ்தல நடபடிகள் 2:38, 17:30, ரோமர் 3;:10-18, எபேசியர் 2:1-3, வெளிப்படுத்தல் 20:12-15, ஏசாயா 66:24)

3. நமது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, பாவமற்ற ஜீவியம், பிராயசித்த மரணம், உயிர்தெழுத்தலின் வெற்றி, பரமேறுதல், நமக்காக பரிந்து பேசுதல், இரண்டாம் வருகை, ஆயிரவருட அரசாட்சி (சகரியா 14:4, மத்தேயு 1:23, 24:30, 28:5-6, லூக்கா 1:35, யோவான் 14:30, 20:3-18, அப்போஸ்தலர் 1:9-11, ரோமர் 5:11, 1:4, பிலிப்பியர் 2:6-11, 1 தெசலோகிகேயர் 4:15-17, 2 கொரிந்தியர் 5:19, 1 தீமோத்தேயு 3:16, எபிரேயர் 2:17, 4:15, 7:25-26, 1 யோவான் 2:1, வெளிப்படுத்தல் 1:7, 20:1-15)

4. இயேசுக்கிறிஸ்துவின் முடிவற்ற ஊழியத்தின் பயனாக விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாகுதலும், பரிசுத்தமாகுதலும். (ரோமர் 3:24, 5:1-9, 6:6, 11-14, 8:33, 10:4, 1 கொரிந்தியர் 6:11, 2 கொரிந்தியர் 7:1, எபிரேயர் 10:10)

5. விசுவாசிகளுக்கு அடையாளங்களுடன் கூடிய பரிசுத்தாவியின் நிறைவு. (லூக்கா 3:16, 11:9-13, யோவான் 7:37-39, அப்போஸ்தலர் 1:4-5, 2:1-4, 38, 39, அப்போஸ்தலர் 10:46, 19:6, எபேசியர் 1:23, 4:12)

6. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பக்திவிருத்தி, பரிசுத்தம், ஆறுதலுக்கான பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள். (1 கொரிந்தியர் 12:4-11, 14:3, 12, 26, எபேசியர் 1:23, 4:12)

7. தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, ஆகிய ஞான அனுமானங்கள். (மத்தேயு 28:16, மாற்கு 16:16, லூக்கா 22:19, 20, அப்போஸ்தலர் 2:38, 8:12, 36-38, ரோமர் 6:3-7, 1 கொரிந்தியர் 10:15-22, 1 கொரிந்தியர் 11:23-32)

8. தெய்வீக அருளால் எழுதப்பட்ட வேத வசனமும், அதிகாரமும். (2 தீமோத்தேயு 3:16, 2 பேதுரு 1:21, லூக்கா 24:44, 1:1-4, 2 சாமூவேல் 23:2)

9. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர், மேய்ப்பர், போதகர், மூப்பர், உதவியாளர் இவர்களுக்கான சபையின் ஆளுகை. (அப்போஸ்தலர் 6:2, 3, 6, 13:1-3, 20:28, 2 கொரிந்தியர் 11:28, எபேசியர் 4:8-16, 1 தீமோத்தேயு 3:1-13, தீத்து, 1:5-9, எபிரேயர் 13:17, 1 பேதுரு 5:1-4, லூக்கா 6:13, ரோமர் 16:1)

10. கிருபையினின்று வீழ்ச்சியுறுதல் சாத்தியம் (ரோமர் 11:20-22, கொலேசேயர் 1:21-23, எபிரேயர் 6:4-6, 10:26-29, 38, 39, வெளிப்படுத்தல் 22:19, பிலிப்பியர் 2:12, 2 பேதுரு 2:4-22)

11. தசமபாகம் மனப்பூர்வமான காணிக்கை செலுத்துதல் (ஆதி 14:20, 28:22, நீதி 3:9-10, மல்கியா 3:10, 1 கொரிந்தியர் 9:6-7, எபிரேயர் 7:1-10)


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


வெள்ளி களிம்பாகுமோ?

வெள்ளி களிம்பாகுமோ?

பொன் மங்கிப் போகுமோ? பசும்பொன் மாறிப் போகுமோ? வெள்ளி களிம்பாகுமோ?

இஸ்ரவேல் தேவனை விட்டு பின்வாங்கி பாவ வழிகளில் சென்று தங்களைக் கெடுத்துக் கொண்ட போது அவர்கள் தேவனுடைய பாதுகாப்பை இழந்து போனார்கள். அவர்கள் வாழ்வில் துன்பங்களும் அழிவுகளும் பெருகியது. அந்த நிலைமையை குறித்து தேவனுடைய தீர்க்கதரிசியான ஏரேமியா கூறிய வார்த்தைகள்:

“ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. ஐயோ! தங்கத் துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.”

ஆம் அவர்களது மகிமை அவர்களை விட்டு போனது. அவர்களது மேன்மை அவர்களிடத்திலிருந்து அகற்றப்பட்டது. தங்கத்துக் கொப்பான வர்கள் மட்பாண்டங்களாய் எண்ணப்பட்டார்கள். இஸ்ரவேல் பாவ வழிகளில் சென்ற போது தேவன் தமது தீர்க்கதரிசியான ஏசாயா வினுடாக அவர்களைக் குறித்து:

“உன் வெள்ளி களிம்பாயிற்று, உன் திராட்சரசம் தண்ணீர்க் கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கி றார்கள், அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகின்றான், திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள், விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.” என்று கூறியுள்ளார்.

தங்கமே, தங்கமணியே என்று தாலாட்டிய பிள்ளைகள் ஏன் இப்படி யானார்கள்? கடவுளை நம்பித்தானே இருக்கிறேன். பின்ன ஏன் இப்படியாயிற்று? என்ற கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு.

சோம்பேறியாக உள்ளவன் சோம்பலின் அப்பத்தைக் புசிப்பான். அவனைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே இவ்விதமாய் கூறப்பட்டு ள்ளது.

“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.” என்றும் “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்ட த்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக் காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.” என்றும் கூறப்பட்டுள்ளது. அவனிடத்தில் வயலிருந்தும் வேலை செய்யாதவனாய் வாழ்கிறான். அவன் வாழ்வில் “அவன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் அவன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”

இன்று கடவுளை நம்பித்தானே இருக்கின்றேன் என்பவன், கருத்தோடு மெய்யான தேவனுக்கேற்றபடி வாழாவிட்டால் அப்படிப்பட்டவன் மேற் கூறப்பட்ட சோம்பேறியைப் போலவே காணப்படுகின்றான். அவனுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது. அவன் வாழ்க்கையானது காஞ்சொறி மூடிய நிலத்தைப் போலவும், இடிந்து போயுள்ள கற்சுவர் போலவுமிருக்கும்,

மனிதர்கள் தேவனை அறியவும், அவர்கள் பரிசுத்த வாழ்வை வாழவும், அவர்களை மோட்சத்தில்  சேர்க்கவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து சொன்னார் “நானோ அவர்களுக்கு (இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு) ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவர்களை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.”

தங்கத்திலும் மேலானதும் கிடைப்பதற்கரிய பொக்கிஷமான மனித வாழ்வு மங்கிப் போகாமலும் வாழ்வின் மேன்மை ஓங்கியிருக்கவும் தேவனுடைய திவ்விய வசனம் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயுள்ளது.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

பொன் மங்கிப் போயிற்றோ? பசும்பொன் மாறிப் போயிற்றோ? வெள்ளி களிம்பாயிற்றோ?

உன் பாவங்களை மன்னித்து உன் சாபங்களை நீக்கி உனக்கு புது வாழ்வு தந்து உன்னை புது மனிதனாய் மனுஷியாய் மாற்ற இயேசு இருக்கிறார். இன்று நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

போதகர் ரஞ்சிற் கொன் ஸ்ரன்ரைன் 
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH




Wednesday, January 27, 2016

அறுப்பு மிகுதி!

    இயேசு:
    அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். (லூக்கா 10:2 )

Tamil Bible Studies, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

இன்றைய உலகில் பிள்ளைகள், வாலிபர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்கிறார்கள். பெற்றோர் வேறு தேசத்திலே கல்வி கற்றதால், இங்கு பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவைகளை உண்டு பண்ணும் அடிப்படைக் காரணிகளையும் அறிய சிரமமாயிருக்கின்றது. அவற்றை அறிந்து கொண்டாலும், பல சமயங்களிலே, பிள்ளைகள் தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆகவே பிள்ளைகள் தங்கள் சூழ்நிலைகளை வெற்றிகொள்ள தேவ வழிடத்துதல் இன்றியமையாதது. 

தேவ வழிடத்தலை பெற்றுக்கொள்ள, பிள்ளைகள், சிறிய வயத்திலிருந்தே முறையான கிறிஸ்தவ பாடத்திட்டத்தின் படி பயிற்றப்பட வேண்டும். அந்தந்த வயதிற்குரிய சவால்களை எதிர் நோக்கி வெற்றி பெற, சரியான காலத்தில், தேவ காரியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி தேவ வழி நடத்தலை பெற்றுக் கொள்வது, எவை தேவனிடமிருந்து வருகின்றது, இவை இந்த உலத்தினால் திணிக்கபடுகின்றன என்பதை அறிய, முறையான பாடத்திட்டம் அடங்கிய வேதாகம பாடங்களை  ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றை மையமாக கொண்டு, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை(SUNDAY SCHOOL) வகுப்புகளை அமைத்துள்ளோம். நாலு (4) வயதிலிருந்து பதினெட்டு (18) வயதுவரை, முறையான வேதபாடங்களை கற்றுகொள்ள தேவையான புத்தகங்கள் பெற்றுக்கொள்வதில் நாங்கள் முதலீடு செய்கின்றோம். கரிசணையோடு கற்றுக்கொடுக்கும் தகுந்த ஆசிரியர்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம். 

தேவ காரியங்களை, பிள்ளைகளின் சிறிய வயதிலிருந்து கற்றுங் கொடுங்கள். 





Our Fundamental Beliefs

Fundamental Beliefs 

1. The one true and living God, who eternally exists in three persons in unity: Father, Son, and Holy Spirit.

 2. The divine inspiration and authority of Holy Scripture.

 3. The original perfection of creation; the inherent corruptness of humanity through the Fall; the necessity of repentance and regeneration by grace and through faith in Christ alone, and the eternal separation from God of the finally unrepentant.

 4. The Virgin Birth, sinless life, atoning death, triumphant resurrection, ascension and continuing intercession of our Lord Jesus Christ. His second coming and eternal kingdom reign.

 5. The Justification and sanctification of believers through the finished work of Christ, their security as they remain in Him and their future resurrection in an incorruptible body.

 6. The Sacraments of Baptism by immersion and of the Lord’s Supper.

 7. The Baptism of the Holy Spirit for believers with supernatural signs empowering the Church for its mission in the world.

 8. The gifts of the Holy Spirit for the building up of the Church and ministry to the world.

 9. Christ’s leadership of the Church through Apostles, Prophets, Evangelists, Pastors, Teachers and elders for the unity, maturity and growth of the Church.

 10. The privilege and responsibility of wise stewardship of that entire God has given, including the practice of tithes and offerings to the local church. 

11. Tithes and Freewill offering


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH





Tamil Christian Church in Toronto

We are a Tamil Christian Church, mainly focused on the Tamil community who lives in Greater Toronto Area.

GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


Pentecostal Anointing

We believe Pentecostal anointing:

- The Baptism of the Holy Spirit for believers with supernatural signs empowering the Church for its mission in the world.


- The gifts of the Holy Spirit for the building up of the Church and ministry to the world.

GRACE TABERNACLE APOSTOLIC CHURCH
Scarborough, Ontario, Canada

எனது அடையாளம் (My Identity)



யாரப்பா நீ? என்ற கேள்வியுடன் முதியவர் ஓருவர் மனிதர்களை சந்தித்தார். அவரிடத்தில் அமைதியும் பேச்சில் கெம்பீரமும் இருந்தது. அவர் ஒருவரைப் பார்த்து யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு வைத்தியர் என்று சொன்னார். முதியவர் அவரை உற்றுப்பார்த்து, வைத்தியர்கள் அநேகர் இருக்கின்றார்கள், யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் தனது பெயரை சொன்னார். அந்த முதியவர் அவரை நோக்கி இந்த பெயரிலும் அநேகர் இருக்கிறார்களே, நீ யாரென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்டார். அப்போது அந்த வைத்தியர் தான் இன்னாருடைய மகனென்றும், திருமணமாகி தனக்கு மனைவி பிள்ளைகள் உண்டு என்று விபரங்களைச் சொன்னார்.

அப்போது அந்த முதியவர் இது தனித்துவமான உனது அடையாளம். ஆயினும் அந்த அடையாளத்தைக் காத்துக் கொள்ளுகின்றாயா என்று கேட்டார். 

வைத்தியர் அந்த முதியவரை நோக்கி பார்த்தார். முதியவர் தனது கேள்வியை விளக்கிக் கூறினார். 

நீ உனது பெற்றோருக்கு மகனாகவே நடந்து கொள்கின்றாயா? அதற்காக என்ன செய்கின்றாய்?

உன் கடமைகளை உண்மையாய்ச்; செய்கிறாயா? அதற்காக என்ன செய்கின்றாய்? 

உன் மனைவிக்கு உண்மையான கணவனாய் நடந்து, அன்புகூர்ந்து, உன் கடமைகளைச் செய்கின்றாயா? 

உன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாய், வழிகாட்டியான தகப்பனாய் இருக்கின்றாயா? அதற்காக என்ன செய்கின்றாய்? 

இவை நீ உனது தனித்துவமான அடையாளத்தை காத்து வாழ்கின்றாயா இல்லையா என்பதை உனக்கு விளக்கும் என்றார்.

இந்த கேள்விகள் கணவனுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் பொருந்தும். எனது அடையாளத்தை நான் காத்துக் கொள்கின்றேனா? பல பெற்றோர் தமது வாழ்வில் உள்ள தவறுகளை ஓழுங்கு செய்யாது தமது பிள்ளைகள் ஒழுங்காய் நடக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். 

நண்டு தனது கண்கள் உள்ள பக்கமாய் நடப்பதில்லை. அதன் கண்களுக்கு வலது அல்லது இடது பக்கமாகவே அது நடக்கும். ஒருமுறை தாய் நண்டு தனது குட்டி நண்டைப் பார்த்து, மற்ற பிராணிகளைப்போல் உனக்கு நேராக நடக்க முடியாதா? கண்களுக்கு நேராய் நட என்று கண்டித்தது. குட்டி நண்டும் முயற்ச்சித்தது ஆனால் முடியவில்லை. தாய் நண்டோ மிகவும் கண்டிப்பாய் நீ நேராய் நடந்துதான் ஆகவேண்டும் என்று கூறிவிட்டது. இடைவிடாத முயற் ச்சிக்குப் பின்பு குட்டி நண்டு களைத்துப் போய் தனது தாய் நண்டைப் பார்த்து நான் முயற்ச்சி பண்ணினேன் என்னால் முடியவில்லை. நீதான் கொஞ்சம் நடந்து காட்டேன் என்று கேட்டது. இப்போது தாய் நண்டுக்கு என்ன சொல்ல முடியும்.

இயேசுக்கிறிஸ்து வெளிப்படுத்தல் விஷேசத்தில் 2:6ல்: 

“நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.” என்று எபேசு சபையைக் குறித்து சொன்னார். 

நீ தவறென்று அந்த பழக்கங்களை வெறுக்கிறாய், ஆனாலும் அதை நீ செய்வதற்கும் இடம் கொடுக்கிறாய். “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளி ருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” இந்த புது சிருஷ்டியானது “தன்னைச் சிருஷ்டி த்தவருடைய (தேவனுடைய) சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனாகும்”. இது தேவனாலே மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈவாகும். இது எப்படி சாத்தியமாகும்? 

தேவன் இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமா யிருக்கிறார். அவர் மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். நம்மை அவர் அறிந்திருக்கின்றபடியால் அவர் எமக்கு என்ன உதவி தேவை என்பதை அறிந்திருக்கின்றார். தன்னிடத்தில் வருகிறவனை தான் புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன தேவன் உண்மையுள்ளவராயுள்ளார்.

இன்று உனது தேவை என்ன? இன்று உனது வாழ்க்கை மாற வேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், தேவனின் புது சிருஷ்டியாக, உனது வாழ்க்கை சரியான பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை புது சிருஷ்டியாக்கி உமது பாதையில் நடத்தும்; என்று கூறுவாயாக. 

“இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்;”


போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன் 
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH




Jesus Said - (இயேசு கூறினார்)

இயேசு கூறினார்: 


"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்." (மத்தேயு 11:28-30) 



Tuesday, January 26, 2016

Kaatrulla portha.... (meaing - strike while the iron is hot)


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. இதற்கொத்த பழமொழிகள் வேறு பாஷைகளிலும் உள்ளன. நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடாது பயன்படுத்துவதின் அவசியத்தை மனிதர்கள் அறிந்து ள்ளமையால் இத்தகைய பழமொழிகளை உண்டுபண்ணியுள்ளனர். ஓருவர் கூறிய ஒரு உண்மை சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது ஏற்ற தாயிருக்கும். 

அவர் வேலை செய்த கம்பனியில் அவருக்கொரு நண்பன் இருந்தார். ஓரு நாள் இவர் தனது நண்பனுடன் அலுவலக வேலைகளைக் குறித்து பேசியபோது, ஓர் குறிப்பிட்ட வேலை மிகவும் கடினமானது என்று கூறினார். நண்பனோ அவரிடம், அது மிகவும் இலகுவான வேலை. அதன் செயல்முறையின் அடிப்படைகளை விளங்கிக்கொண்டால் அது மிகவும் இலகுவானதும் ஆர்வமாக செய்யக்கூடியதுமான வேலை. அது எனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமானால் அதை நான் உமக்கு சொல்லித்தருகிறேன் என்றார். ஆனால் அவரோ நண்பனின் நல்ல உதவியை ஏற்க மனதில்லாமல் வீண்பெருமையுடன் அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டார்.

சில மாதங்கள் கடந்தன. அவருக்கு இம்முறை அந்த வேலையை செய்யும்படியும் அதை செய்து முடிப்பதற்கு காலவரையறையும் கொடு க்கப்பட்டது. அவருக்கோ அதை செய்யத் தெரியாது. அவருடைய அதிகாரி அவ்வேலையை அவரிடத்திலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளும் படியான பல முயற்ச்சிகளை அவர் எடுத்தார். ஆயினும் அவை பயன் தரவில்லை. நோயுற்றிருப்பதாக விடுமுறையும் எடுத்தார். அதுவும் பலன ளிக்கவில்லை. அவர் தனது வேலையை முடித்து கொடுக்க வேண்டிய நாட்களோ சமீபித்துக் கொண்டே வந்தது. இப்போது அலுவலகத்தில் அவர் வெட்கப்படத் தொடங்கினார். அவரது வீண் பெருமைக்கு விலை கொடுக்கும் நேரமாயிருந்தது. இறுதியில், அலுவலகத்தில் மற்ற பிரி விலே வேலை செய்யும் தன் நண்பனைத் தொடர்பு கொண்டு தனது தவறையும் அதனால் உண்டான அவமானங்களையும் கூறி உதவி கேட்டார். நண்பனும் வார விடுமுறைதினத்தில் கம்பனிக்கு சென்று அவ்வேலையை மிகவும் இலகுவாக செய்து கொடுத்தார். ஆனால் அவரோ அதைக் கற்றுக் கொள்ளவேயில்லை.

காலம் திரும்பி வருமோ? தவறவிடும் நல்ல சந்தர்ப்பங்களும் மீண்டும் வருமோ?

எருசலேமைக் குறித்து, ‘உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமா யிருக்கும், இப்n;பாழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிரு க்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்து கொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னி லுள்ள உன் பிள்ளைகளையும் தihயாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.’ 

அது அவர்கள் வாழ்வில் நடந்தேறியது. 

தேவன் அன்புள்ளவர், அவர் பரிசுத்தர். அவர் நீதியாய் நியாயம் தீர்ப்பவர். தேவன் மனந் திரும்புகின்றவர்களிடத்தில் தயவைக்காட் டுகின்றார். மனம் திரும்பாமல் வாழ்பவர்களையோ அவர் நியாயத் தீர்ப்புக்கென்று நியமிக்கிறார். இன்றே இரட்சணிய நாள். இன்றே அநுகி ரகத்தின் நாள். இன்றே விடுவித்து, இன்றே பாவங்களை மன்னித்து, இன்றே அநுக்கிரகம் செய்ய தேவன் ஆயத்தமாயுள்ளார்.

மனிதனுக்கு செவ்வையாகத் தோன்றும் வழிகள் உண்டு. அதன் முடிவோ மரணம். தேவனிடத்தில் ஒருவன் தன் வாழ்வை ஒப்படைக்கும் போது, அவனை அவர் கரம் பிடித்து நடத்துவார். மலைகள் விலகி னாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, வாக்கு பண்ணின தேவன் உன்மேல் மனதுருக்கம் உள்ளவராய் இருக்கின்றார்.

மேலும் அவர் உன் பிள்ளைகளெல்லோரும் கர்த்தரால் போதிக்கப்ப ட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்றும் வாக்கு பண்ணியுள்ளார். 
  
பிரியமான சகோதரனே, சகோதரியே! இந்த வாக்குத்தத்தங்களை சுதந் தரிக்க எம்மெல்லோரிலும் ஓரு தகுதி இருக்க வேண்டும். அத்; தகுதி எம்மால் அல்ல, எமது தேவனாலே எமக்கு உண்டாகின்றது. இது தேவ கிருபை. 

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்க ளிலிருந்து விடுதலை வேண்டும், தேவனுடைய கிருபையை பெற வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக. 

கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

 “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” 

போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன் 
Pastor Ranjit Constantine 
GRACE TABERNALCE APOSTOLIC CHURCH



WELCOME TO VIEW OUR SITE




Monday, January 25, 2016

Though we have eyes, though we have ears... (Kannkal irunthum, kaathukal irunthum..)

கண்கள் இருந்தும் காதுகள் இருந்தும்... 


ஓரு சிறு பையன் தனது வீட்டிலே விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய தாயார் அவனிடத்தில் அவனது அப்பா வந்திருப்பதாய் கூறினாள், ஆனால் அவனோ அப்பா வரவில்லை என்று மறுத்தான். அவன் தாயோ இங்கே வந்து பார், இதோ அப்பா வந்திருக்கிறார் என்றாள். அவனோ மீண்டும் மறுத்தான். அதைக் கேட்ட தகப்பனார் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார். அவனோ தான் மறுத்ததை சாதிக்க தன் காதுகளை தன் கையினால் அடைத்துக் கொண்டு தன் வாயினாலே தொடர்ச்சியாக சத்தம் போட்டான். தகப்பனோ தனது மகன் தன்னைக் காணத்தக்கதாய் அவன் முன்பாக வந்தார். அவனோ தன் கண்களையும் இறுக மூடிக்கொண்டான். இச்சிறுவனின் செயல் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கலாம் அல்லது பிடிவாதமாய் இருக்க லாம். அது எப்படியாய் இருந்தாலும் அவன் செயலானது அந்த நேரத்தில் அவனைத் தனது தகப்பனிடத்தில் சேராமல் தடுத்துவிட்டது. 

இது அவன் கண்களின் குறைபாடா? அல்லது அவன் காதுகளின் குறைபாடா? இல்லை, இது அவனது தெரிந்து கொள்ளுதலாகும்.

ஒருவருடைய செயலை மனிதர்கள் பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். அச்செயலை பல வேறு பெயர்களினால் அழைக்கலாம். ஆனால் அச்செயலின்; முடிவு என்ன என்பதே முக்கியமானது.  

பலர் தமது வாழ்வில் பணம், சிற்றின்பம், பகட்டு போன்று பல காரியங்களை முன் வைத்து அதையே நாடி, தேடி ஓடுகின்றார்கள். அதன் முடிவு பற்றி எண்ணமற்று வாழ்கின்றார்கள். 

தேவனுடைய வார்த்தையிலே “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகி றார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு (தேவனுடைய வழியை விட்டு) வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டி ருக்கிறார்கள்.” என்று வேதாகமத்தில் வாசிக்கின்றோம். 

இவை உண்மையும், காலம் காலமாக மனிதர்களின் வாழ்வில் கண்ட உண்மையுமாகும். ஓருவனின் செயலுக்கு எவ்விதமான பெயர் இருந்தா லும் அது அவனது ஆத்துமாவைக் கெடுக்குமானால் அதனால் பிரயோ சனம் என்ன? அவனது செயல் அவன் பிள்ளைகளின் ஆத்துமாவை அழித்துப்போடுமானால் அவனது பிரயாசம் எதற்கு?

தேவன் தமது தீர்க்கதரிசியினுடாக “காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்
கள், கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்க ளினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமா க்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்” என்று, மனிதர்களின் தெரிந்து கொள்ளுதலைக் குறித்துக் கூறியுள்ளார். 

ஓரு வாலிபன் தன் வீட்டைவிட்டு தூர தேசம் சென்றான். அவனிருந்த இடம் அவன் வீட்டாருக்கு தெரியாது. சில வருடங்களுக்கு பின்பு அவன் நோயுற்றான். வைத்திய செலவிற்கு அவனிடத்தில் பணமிருக்க வில்லை. அதனால் தன் தொழிலதிபரான தகப்பனாருக்கு தனது நிலையைக் கூறி தனக்கு பணம் வேண்டும் என்று கடிதம் எழுதினான். தனது தகப்பனின் பதிலை அவன் ஆவலுடன் பார்த்திருந்தான். ஓரு நாள் அவனது தகப்பனாரின் பதில் கடிதம் வந்தது. அதை அவசரமாய்த் திறந்தான். உள்ளே பணம் இருக்கவில்லை. அவன் கோபத்தோடு அக்கடிதத்தை குப்பையிலே எறிந்து விட்டான். இறுதியில் அவன் எவ்வித வைத்திய உதவியுமின்றி மரித்துப் போனான். 

அக்கடிதத்திலே அவனது தகப்பன் அவ்விடத்திலுள்ள தனது நண்பனை சந்திக்கும் படியும், அவனுக்கு வேண்டிய எல்லா வைத்திய உதவிக ளையும் பண உதவிகளையும் செய்யும்படி தனது நண்பனுக்கு சொல்லியிருப்பதையும் எழுதியிருந்தார். ஆனால் அவனோ பணத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்ததனால், தகப்பன் அவனுக்கு ஆயத்தப் படுத்தியிருந்த மேலான நன்மைகளை இழந்து போனான்.

பிரியமான சகோதரனே, சகோதரியே! 

ஓருவன் தேவனுடைய கிருபையையும் அவர் அவனுடைய வாழ்க்கை யில் அவனுக்கென்று வைத்துள்ள நோக்கத்தையும் அவன் காணாமலும் கேளாமலும் இருப்பது ஏன் என்பது இதை வாசிக்கும் போது உனக்கு நிச்சயமாக புரிந்திருக்கும். அது உனது சொந்த தெரிந்து கொள்ளுதலாய் உள்ளது. ஆம், உன்னை சிருஷ்டித்த உன் தேவனை ஏற்றுக்கொண்டு வாழ்வது உனது தெரிந்து கொள்ளுதலாய் உள்ளது.   

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களி லிருந்து விடுதலை வேண்டும், தேவனுடைய கிருபையை பெற வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக. 

இயேசு சொன்னார்: என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடு க்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” 

போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன் 
Pastor Ranjit Constantine 
GRACE TABERNALCE APOSTOLIC CHURCH





Friday, January 22, 2016

Burden and Deliverance (Pazhuwum Viduthalaiyum)

பழுவும் விடுதலையும் 


எந்தக் காரியமானாலும் அது ஓருவரின் பெலத்திலும் அதிகமாகும் போது அது அவருக்கு பழுவாகி விடுகின்றது. வேலை செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற விருப்பம் எல்லோரிட த்திலும் உண்டு. அவ்விருப்பம் உள்ளவர்களும் விடுமுறையை விரும்புகி;றார்கள். காரணம் ஓய்வு தேவை. 

சிலருக்கு அவர்களது வாழ்க்கையே அவர்களுக்கு பழுவாகி விடுகி ன்றது. நீச்சல் தெரியாதவர்கள் சில வேளைகளில் தவறி ஆழத்தில் விழுந்து விடுவதுண்டு. நீச்சல் தெரிந்தவர்களும் வெகு தூரம் நீந்திச் சென்று ஆழத்தில் களைத்து போய்விடுவதுமுண்டு. இவ்விரண்டு நிலை யிலும் அவர்களுக்கு கால தாமதமி;ன்றி உதவிக்கரம் கிடைக்காவிடின் முடிவு மிகவும் வேதனை நிறைந்ததாகவே இருக்கும்.


பரிசுத்த வேதாகமத்திலே இரண்டு சகோதரிகளின் தெரிவைக்குறித்து கூறப்பட்டுள்ளது. ஓருத்தி பெயர் மார்த்தாள், மற்றவள் மரியாள். இயேசு பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராம த்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் அவihத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளது சகோதரி மரியாள், இயேசுவின் பாதத்த ருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தம டைந்து, இயேசுவி னிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில் லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்க ளைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.


நாம் வேலை செய்ய வேண்டும். எமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சில சமயங்களில் அவை எமக்கு பெரிதான பழுவாகி விடுகின்றது. ஆனால் ஆறுதல் தரும் இடமொன்று உண்டு. அது இயேசுவின் பாதமே. இயேசு சொன்னார் “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கி றவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று. ஆம் இயேசுவின் பாதத்தில் இளைப்பாறுதல் உண்டு.

தேவன் தன்னிடத்தில் நம்பிக்கையாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகை யாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கி றேன் என்று சொல்லுகிறேன்.” என்று கூறி அதை நிறைவேற்றினார். அதே தேவன் மாறாதவராய் இருக்கின்றார். 

பரிசுத்த வேதாகமத்திலே பின்வருமாறு தேவனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. 

தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயா வையும் உண்டாக்கினவர், அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார், பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார், கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக் கிறார், மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார், நீதிமான் களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்று கிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். 

மடங்கடிக்கப்பட்டவர்கள் எனப்படுவோர் முற்றிலுமாய் தோல்வியுற்று எழுந்திருக்க முடியாத படி விழுந்து போனவர்கள். அவர்களை தேவன் தூக்கி விடுகின்றார். இங்கு தூக்கி விடுவதென்பது மீண்டும் பெலன் கொடுத்து, வெட்கத்திலும் தோல்வியிலும் நிந்தையிலிருந்தும் விடுதலை கொடுப்பதாகும். தேவன் எமது தலையை நிமிரச் செய்கின்றவர்.

பிரியமான சகோதரனே, சகோதரியே! 

இன்று தேவன் உனது வாழ்கையின் ஆறுதல் தரும் வழிகாட் டியாக வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும், எனக்கு ஆறுதல் வேண்டும் என்று கூறுவாயாக. 

இரட்சிப்பு கர்த்தருடையது, தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.  


போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன்
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH
A TAMIL COMMUNITY BASED CHURCH IN TORONTO

THE INNER MAN - TAMIL MAGAZINE




Thursday, January 21, 2016

"உள்ளான மனிதன்"  

மாதாந்த சஞ்சிகையை வாசியுங்கள் 


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH

A TAMIL COMMUNITY BASED CHRISTIAN CHURCH

Come...வாருங்கள்!

வாருங்கள்! 

“வாருங்கள், நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம்”

மேற்கூறிய வசனம் மந்தை மேய்ப்பர்கள் தங்களிடையே பேசிக்கொண்ட வசனமாகும்.

சகலத்தையும் சிருஷ்டித்த தேவன் மனுக்குலத்தை நித்தியமான அழிவிலிருந்து மீட்கும்படி தமது ஒரே பேறான குமாரன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவரது பிறப்பைப் பற்றியே மேய்ப்பர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். 

இயேசு பிறந்த போது; யூதேயாவிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந் தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். 

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.  பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 

அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:  உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.  

தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாகும். இந்த நற்செய்தியை உலகின் எல்லா பாகங்களிலும் கொண்டாடுகின்றனர். அவரது பிறப்பின் நிமித்தம்: 
  • தேவ தூதர்கள் தேவனைத் துதித்தார்கள்.
  • பூமியிலே தேவ மகிமை வெளிப்படுத்தப்பட்டது. இன்றும் 
அவருடையவர்கள் தேவ மகிமைக்கு சாட்சியாக உள்ளனர்.
  • பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாயிற்று. 
இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனிடத்தில் சேரத்தக் கதாய் இயேசு கிறிஸ்துவினால் பாவமன்னிப்பைப் பெற்று தேவனிடத்தில் சமாதானத்தையும் அவரது பிரியத்தையும் பெற்றுள்ளோம். 

இவை யாவும் மகிழவேண்டிய விடயங்களே. இயேசுவின் பிறப்பு பல காலமாய் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வாகும். அதை நினைத்து மகிழ்ந்து கொண்டாடுவது ஏற்புடையதே.

அதை எப்படி கொண்டாடுவது? வியாபார நோக்கில் உண்டான புனைக் கதைகளை சாராமலும்  வேடிக்கை விநோதங்களை பின்பற்றாமலும் தேவ பயத்தோடும், பரிசுத்தத்தோடும் அன்பைப் பகிர்ந்து தேவ நாம த்தை  மகிமைப் படுத்துவோம். 
  • வாருங்கள் துயரப்படுபவர்களுக்கு ஆறுதல் செய்வோம்.
  • வாருங்கள் கஷ்ட படுபவர்களுக்கு உதவி செய்வோம்.
  • வாருங்கள் ஏழைகளுக்கு உதவுவோம்.
  • வாருங்கள் தேவனுக்கேற்ற நற் செயல்களை செய்வோம். 
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

பிரியமான சகோதரனே, சகோதரியே! 

இயேசு பிறந்த நற்செய்தியை ஏற்றவர்களாய் அவராலே பாவ மன்னிப்பை பெற்றவர்களாய் வாழ்வை அவரிடத்தில் கொடுத்து அவரிடத்தில் வருவாயாக. அவரே நித்திய ஜீவனை அளிக்கின்றவர். 


போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன் 


Wednesday, January 20, 2016

I also saw the One who saw me - Tamil Article from Inner Man

என்னை காண்பவரை நானும் கண்டேன் 


நம்பிக்கை என்பது ஒருவரின் உணர்வாயுள்ளது.

அறியப்படாத ஒரு காரியம் இப்படியாய் நடக்கும், நடக்கவேண்டும் அல்லது நடந்தது என்னும் உணர்வு அவரின் நம்பிக்கையாகும். இதை ஒருவரின் எதிர்பார்ப்பின் உறுதித்தன்மை என்றால் அது மிகையாகாது. மனித வாழ்வில் நம்பிக்கையானது இன்றியமையாததாயுள்ளது. இது வயது வேறுபாடின்றி எல்லோரிலும் காணப்படும் ஓர் அம்சமாகும்.

குழந்தைகள் முதற் கொண்டு பிள்ளைகள் எல்லோரும், தம் பெற்றோரிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்கின்றனர். இது மனிதரிடையே இயல்பாகவே காணப்படுகின்றது. இவை மாத்திரமல் லாமல் இன்னும் அநேக காரியங்களைப் பற்றிய நம்பிக்கைகளும் மனிதரிடத்தில் உண்டு.

சில சமயங்களில் பொய்யை நம்புவதும் உண்டு. இத்தகைய நம்பிக் கைகளின் உண்மைத்தன்மை குறுகிய காலத்திற்குள் வெளிப்பட்டு விடுவதுமுண்டு. இன்னும் பலர் அத்தகைய நம்பிக்கையின் பொய்த்த ன்மை வெளிப்பட்டிருந்தாலும், அந்த நம்பிக்கையின் செயற்பாடுகள் சந்தோசத்தை கொடுப்பதனால் அதினால் பாதிப்பில்லையென்று அதைத் தொடர்வதுமுண்டு. உதாரணமாக நத்தார் தாத்தா (Santa Clause) என்னும் கற்பனை நபர் குறித்த செயற்;பாடுகள்.

மனிதர்கள் எவரும் தங்கள் நம்பிக்கை வீண் போவதை விரும்புவ தில்லை.

நம்பிக்கை வீண் போகும் நிலைமைகளில்
நான் ஏமாந்து போனேன்
எனக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டது
நான் எனது மதியீனத்தின் பலனை அனுபவிக்கின்றேன் என்று மனிதர்கள் நொந்து கொள்வதுண்டு.
பல சந்தர்ப்பங்களில் இதனால் வன்முறைகளும் தோன்றுவது முண்டு.

பரிசுத்த வேதாகமத்தில் ஆகார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைக் குறித்த சம்பவத்தைப் பார்ப்போம். (ஆதி 16:)

ஆபிரகாம் சீமானாயிருந்தான். அவன் மனைவி சாராய்க்கு பிள்ளை யில்லாதிருந்தது. அவள் தன் கணவனுக்கு சந்ததியுண்டாகும் படி தனது அடிமைப் பெண் ஆகாரை அவனுக்கு மனைவியாக கொடுத்தாள்.

ஆகாரின் வாழ்வில் சந்தோசம் துளிர்க்கத் தொடங்கியது, அவள் கர்ப்பவதியானாள். தான் கர்ப்பமுற்றதால் தனது எஜமானியை அற்பமாக எண்ணத் தொடங்கினாள். அவளது நம்பிக்கைகள் பெருகிக் கொண்டது.

அவளது எஜமானி சாராய் தனது அடிமைப் பெண்ணின் நடவடிக் கைகளை கண்ட போது அவளை மிகவும் கடினமாய் நடத்தியதால் இந்நிலையில் ஆகாரின் நம்பிக்கையெல்லாம் விலகி ஓடத் தொடங்கியது. தனது பிள்ளையின் தகப்பனான எஜமானனிடத்திலிருந்து அவளுக்கு உதவி கிடைக்கவில்லை. இதனால் அவள் எல்லாவற் றையும் விட்டு ஓடிப்போகின்றாள்.

அவளது எதிர்பார்ப்புகள் யாவும் கானல் நீராயிற்று. வாழ்வில் தோற்றுப் போன நிலைமை. எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலை. எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட உணர்வு.

அந்நிலையிலே கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அந்த இடத்திலே அவள் ஆசீர்வாதத்தை பெற்றவளாய் தனது எதிர்காலத்தைக் குறித்த அறிவுடையவளாய் தேவ வழி நடத்தலைப் பெற்றுக் கொண்டாள்.

அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.

ஆம் எங்களைக் காண்கிற தேவன் இருக்கிறார். அவர் இரக்கமுள்ளவர். காருண்யத்தினால் எம்மை அணைத்துக் கொள்ளும் அன்புள்ள தேவன்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

இன்று உனது வாழ்வில் தேவன் வர வேண்டுமானால், இயேசுவே என் பாவங்களை மன்னித்து  என்னை உமது பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளும் என்று கூறுவாயாக.

“உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.”


போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன்
கிறேஸ் ற்ரபனக்கல்  சபை

THE INNER MAN - JAN 2016   

God's Promises

தேவ வாகுத்தத்தங்கள் 

தேவன் தாமே எங்களுக்கு முன்பாக "ஆசீர்வாதத்தையும் சாபத்தையும்", 
"ஜீவனையும் மரணத்தை யும்" வைத்திருக்கிறார். தீர்மானம் என்னுடையது . தேவனுடைய விருப்பம், சித்தமெல்லாம் ஒருவரும் கேட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைவதாகும். 

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16)

அது மட்டுமல்லாமல் நன்மையை கண்டடைய அநேக வாகுத்தத்தங்களை எங்களுக்கு அருளியிருக்கிறார். அந்த வாகுத்தங்களை நாங்கள் விசுவாசத்தோடு பற்றிக்கொண்டு, எங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்பு கொடுத்து வாழ்ந்தால், அவைகள் எங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும்.

கர்த்தர் வாக்குமறாதவர்! காலங்கள் மாறிப்போகலாம், சூழ்நிலைகள் எல்லாம் எதிரானதாக தென்படலாம், நம்பின மனிதர்களும் உதவ முடியாத நேரம் வரலாம், ஆனால், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.      

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பராக!   

"உள்ளான மனிதன்" சஞ்சிகையை எங்கள் இணைய  தளத்தில் படிக்கலாம்.

Tabernacle Daily Word

    கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:3-4)

Tuesday, January 19, 2016

Daily Word

    ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. (1 தீமோத்தேயு 6:20)
Visit us at www.gtachurchnet.ca
Grace Tabernacle Apostolic Church

New Year Wishes - in Tamil

புதுவருட வாழ்த்துக்கள்! 

பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுதிரனையும் நம்பாதேயுங்கள், அவனுடைய  ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந் நாளிலே  அவன் யோசனைகள் அழிந்துபோம்.

யாகோபின் தேவனைத் தன் துணையாக கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் மேல்  நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகலிலுள்ள   யாவையும் உண்டகினவர்; அவர்  என்றென்றைக்கும் உண்மையை காக்கிறவர். 

அவர் ஓடுகப்ட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருகிறர்க ளுக்கு  ஆகாரங்க்கொடுகிறார்; கடுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாகுகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிகப்பட்டவர்களை   கர்த்தர்  தூக்கி விடுகிறார். நீதிமான்களைக்  கர்த்தர் சிநேகிக்கிறார்.

பரதேசிகளை கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும்    விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்கரின் வழியையோ கவிழ்த்துப்  போடுகிறார்  (சங்கீதம் 146:1-9)

காலங்கள் மாறிப் போகலாம், நாங்கள் நம்பியிருக்கிற மனிதர்கள் கைவிடலாம் அனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும் மறாதவராக வே இருகின்றார். 

எனவே  "உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிகையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் 27:5)

இதுவே நாங்கள் உங்களுக்கு கூறும் புதுவருட வாழ்த்துகள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!


கிறேஸ்   ற்ரபனக்கல்  அபோஸ்தல சபை 


"உள்ளான மனிதன்" சஞ்சிகையை படிக்க எங்கள் இணைய தளத்திற்க்கு    செல்லுங்கள்.

Listen to Audio Sermons

Listen to Audio Sermons by Pastor Ranjit Constantine

https://gtachurchnet.ca/sermon/

Success in Life

    "உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிகையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கபண்ணுவார்" சங்கீதம் 37:5
    Visit us on www.gtachurchnet.ca

Monday, January 18, 2016

Tabernacle Tamil News

"அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளர்கிறவர்களாகயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்." -- எபேசியர் 4:15

Fundamental Beliefs


1. The one true and living God, who eternally exists in three persons in unity: Father, Son, and Holy Spirit.

2. The divine inspiration and authority of Holy Scripture.

3. The original perfection of creation; the inherent corruptness of humanity through the Fall; the necessity of repentance and regeneration by grace and through faith in Christ alone, and the eternal separation from God of the finally unrepentant.

4. The Virgin Birth, sinless life, atoning death, triumphant resurrection, ascension and continuing intercession of our Lord Jesus Christ. His second coming and eternal kingdom reign.

5. The Justification and sanctification of believers through the finished work of Christ, their security as they remain in Him and their future resurrection in an incorruptible body.

6. The Sacraments of Baptism by immersion and of the Lord’s Supper.

7. The Baptism of the Holy Spirit for believers with supernatural signs empowering the Church for its mission in the world.

8. The gifts of the Holy Spirit for the building up of the Church and ministry to the world.

9. Christ’s leadership of the Church through Apostles, Prophets, Evangelists, Pastors, Teachers and elders for the unity, maturity and growth of the Church.

10. The privilege and responsibility of wise stewardship of that entire God has given, including the practice of tithes and offerings to the local church.