Tuesday, March 8, 2016

A TAMIL CHRISTIAN CHURCH IN SCARBOROUGH

As Apostle Paul writes to Timothy “O Timothy, keep that which is committed to thy trust” (I Timothy 6: 20)”- Our main goal is to be faithful to God in what has been entrusted to us, and to be a part of fulfilling His eternal purpose, by doing His will in our lives.

Jesus Said: “He that gathereth not with me scattereth abroad.” So gather His people with Him and so that they can abide in Him and bear good fruits.


We educate and encourage believers to desire in “Till we all come in the unity of the faith, and of the knowledge of the Son of God, unto a perfect man, unto the measure of the stature of the fullness of Christ:

That we henceforth be no more children, tossed to and fro, and carried about with every wind of doctrine, by the sleight of men, and cunning craftiness, whereby they lie in wait to deceive;
“But speaking the truth in love, may grow up into him in all things, which is the head, even Christ: (Ephesians 4:13-15)

With love, we emphasize and remind all the believers “For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?” So guard everything that is bestowed to your trust, and explain the importance of good governance of our elect and calling.


gtachurchnet.ca 

Monday, February 29, 2016

Be Strengthen by God's Grace - தேவ கிருபையில் பெலப்படு

பிரதான வாசகம்: ரோமர் 15:33

ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு (2 தீமோத்தேயு 2:1)

 “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்: மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்: ஆகிலும் பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்: அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும் போகவில்லை. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்: அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள்.” என்று கர்த்தர் ஒரு உவமையைச் சொன்னார்.

இன்றைய நாட்களிலே பலருடைய வாழ்க்கை, இரண்டாவது மகனுக்கு ஒத்ததாக இருக்கின்றது. “ஆம் ஐயா செய்கின்றேன்” “நீர் சொல்வதை கேட்கிறேன்” என்று கூறிவிட்டு, அதை அவர்கள் வாழ்க்கையிலே செய்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் பிதாவின் சித்தத்தை செய்யாத வர்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறினார். 

எங்கள் மீது பொல்லாப்பு வரும் முன்பதாக நாங்கள் கணக்கு பார்க்கவேண்டும். கர்த்தர் என்னிடம் என்னத்தைத் தந்தார்? என்னத்தை நான் செய்திருக்கிறேன்? கர்த்தருக்கு முன்பாக நான் எவ்விதமாக காணப்படுகின்றேன்? 

ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து தேவனால் தூக்கி உயர்த்தப்பட்ட சிலர், தங்கள் வாழ்க்கையில் கணக்குப்பார்க்க தவறினதினால், அவர்களுடைய வாழ்க்கையின் பின்பகுதி பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது. ஆரம்பத்திலே தேவன் செய்த காரியங்களை அறிக்கை பண்ணி, தேவனுக்கு நன்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள், காலங்கள் சென்றபின், தங்களை உயர்த்திய தேவனை மறந்து, மற்றவர்களின் பார்வைக்கு தாங்கள் பெரியவர்கள் என்றும் பரம்பரை பரம்பரையாக தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெருமையாக பேசி, தேவனை விட்டு விலகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தார்கள். தேவனுடைய பிள்ளை என்ற பட்டம் (வவைடந) அவர்களிடம் உண்டு, ஆனால் தேவனோ அவர்களோடு இல்லை. இப்படியாக ஆரம்பத்தில் தேவனால் வழிநடத்தப்பட்ட ஊழியர்களும் கூட பிற்காலத்தில் மனிதர்கள் பார்த்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் விழுந்து போயுள்ளார்கள். இவர் எல்லாற்றையும் நன்றாக செய்தாரே? ஏன் இப்படியாக போய்விட்டார் என்று கேள்விகளை கேட்பார்கள். ஏன் இப்படியாக மனிதருடைய வாழ்க்கையில் நடைபெறுகின்றது? ஏனென்றால் தேவன் அவர்களோடு இல்லை, அவர்களைவிடடு விலகிச் சென்றுவிட்டார்.

சவுல் ராஜாவின் வாழ்;க்கையும் இதற்கொத்ததாக இருந்தது. தேவனை விட்டு தன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினான். இதனால் தேவன் சவுல் ராஜாவை தள்ளிவிட்டார். 

இப்படியாக இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளும், பசும் பொன்னைப் போல இருக்கின்றார்கள், காலப்போக்கில் இவர்கள் தேவனை விட்டு விலகிச் செல்கின்றார்கள். காலப்போக்கில் இவர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

கர்த்தரோடு கூட என்னுடைய வாழ்க்கை எவ்விதமாக இருக்கின்றது என நாங்கள் கணக்குப்பார்க்க வேண்டும். எந்த நிலையில் இருந்து கர்த்தர் எங்களை அழைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. தேவனால் வந்த எந்த காரியமும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். தேவ காரியத்திற்கு விரோதமான எந்த ஒரு காரியமும், கொஞ்சமும் எங்கள் வாழ்க்கையில் இருக்க முடியாது. இப்படியாக தேவ சித்தத்தை நிறைவேற்றி, கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும்

Pastor Ranjit Constantine
A Tamil Church in Toronto
Grace Tabernacle Apostolic Church


இந்த செய்தியை முழுமையாக கேட்க 

Thursday, February 18, 2016

Lost Way by Pastor Ranjit Constantine (பாதை தவறிய மனிதன்)

பாதை தவறிய மனிதன்

பொதுவாக எவரும் தமது வாழ்வில் பாதை தவறுவதை விரும்புவதில்லை. பாதை தவறுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அடிப்படை என்னவென்றால் ஒருவர் எவற்றை தனது வாழ்வில் முன்னுரிமைப் படுத்துகின்றார் என்பதே. இதை அவர் தனது சொந்த விருப்பு என்று கூறலாம், ஆயினும் அதன்  முடிவானது அவர் தெரிந்து கொண்ட வழியை விபரிக்கும்.

பரிசுத்த வேதாகமத்திலே, ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து வாழ்பவர்களைக் குறித்து  கூறப்ப ட்டுள்ளது. வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். ஓருவன் தான் சென்றடைய வேண்டிய இடத்தைவிட்டு விலகிச்செல்வானானால், அவன் பாதை தவறிய மனிதனாகின்றான்.
பாதை தவறிய மனிதன் தொலைந்து போகின்ற வழியில் செல்கின்றான். தனது வாழ்வில் நிம்மதியை இழந்து போகின்றான். அவனைச் சார்ந்து இருப்போருக்கும் அவனை நேசிப்போருக்கும் அவன் மனமடிவாகவும் வேதனை உண்டுபண்ணுபவனாகவும் இருக்கின்றான்.

இயேசு கிறிஸ்து சொன்னார்; (லூக்கா 15:4-7)

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவை களில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்கும ளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதihயும் அயலகத்தா ரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித் தேன் என்னோடுகூடச் சந்தோ~ப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமா ன்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்பு கிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோ~ம் உண்டாயி ருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

காணாமற் போன ஆட்டைப்போல பாதை தவறியவர்களை அன்போடு தேடி, விடுதலையாக்கி, அவர்களை பாதுகாப்பான ஆசீர்வாதமான இடத்துக்கு கொண்டு வரும்படி இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவர் அதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார்.

ஓருவன் தன் ஆத்துமாவைக் குறித்து அக்கறையற்றவனாய் இருப்பானா னால் அவன் ஆத்துமா இருளடைந்து நித்திய மரணத்தை நோக்கி செல்லுகிறதாயுள்ளது. அத்தகைய மனிதன் தொலைந்த ஆட்டைப்போல பாதை தவறிச் செல்பவனாக இருக்கின்றான். ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி வாழ்ந்து தகாத காரியங்களினால் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்கின்றான்.

பாவம் வஞ்சனையுள்ளது. வெளித் தோற்றத்திலே அது கவர்ச்சியா யுள்ளது. ஆனால் அதன் முடிவோ கசப்பானது. தேவன் பரிசுத்தர். பாவ செயல்கள் மனிதனை தேவனிடத்தில் இருந்து பிரிக்கின்றது. ஆம், பாவ த்தின் சம்பளம் மரணம். அந்த மரணம் நித்தியமானது. தேவனுடைய கிருபை வரமோ நித்தியஜீவன்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

நீ போகின்ற உனது வழியை நீ அறிந்துள்ளாய். அதை நீ இதுவரை அறியாதிருந்தால் சற்று தரித்திருந்து அதை அறிந்து கொள். இவ்வு லகில் எமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்நாட்கள் மிகவும் ஆசீர்வா தமான பொக்கிஷம். அதை பயனுள்ளதாய் காத்து வாழ்வதே புத்தி யுள்ள வழியாகும். ஓருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டிருந் தாலும் அவன் நித்திய நரகத்தை நோக்கி செல்பவனாக இருப்பானெ ன்றால் அதினால் என்ன பயன்?

இன்று உனது தேவை என்ன. இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது வாழ்க்கை சரியான பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உமது பாதையில் நடத்தும்; என்று கூறுவாயாக.

இயேசு சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”


Pastor Ranjit Constantine
Grace Tabernacle Apostolic Church

gtachurchnet.ca

Saturday, February 13, 2016

Tamil Bible Study Worthiness and Status - தகுதியும் தராதரமும்

தகுதியும் தராதரமும்   

உலகிலே மனிதர்கள் வேறுபட்ட, பல தரப்பட்ட தகுதிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகுதிகள் ஓருவரின் திறமைகள், கல்வி அறிவு, செல்வம் என பல காரணிகளில் தங்கியுள்ளது. ஓருவரிடத்தில் ஒரு வேலையை ஒப்படைக்கும் முன் அதை செய்யத் தக்க அறிவு, தகுதி அவருக்கு உள்ளதா என்று அறிவது அவசியமே. இத்தகுதிகள் இவ்வுலக வாழ்வில் தராதரங்களை உண்டுபண்ணு கின்றது. நாளடைவில் இவைகளே ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினை களையும் ஏற்படுத்துகின்றது. 

பல காலமாக சமூதாயத்தினால் தாழ்த்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒருவரை தேவ ஊழியர் ஒருவர் சந்தித்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவருக்கு கூறினார். அவரும் சந்தோஷமாய் தேவனோடு வாழும் வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டார். தேவ ஊழியரும் அவரைக்  தேவாலயத்தில் வந்து தேவனை ஆராதிக்கும் படி கேட்டுக்கொண்டார். ஞாயிற்றுக் கிழமை அன்று  தேவாலயத்திற்கு சென்ற அவர்; தேவால யத்திற்கு வெளியே தெருவோரமாக முழங்கால் படியிட்டு ஆராதித்தார். இதை அறிந்த தேவ ஊழியர் விரைவாக தேவாலயத்திற்கு வெளியே அவரிடத்தில் வந்து அவரை உள்ளே வந்து மற்றவர்களோடு சேர்ந்து ஆராதிக்கும்படி கூறினார். ஆனால் அவரோ, தான் உள்ளே வர தனக்கு அதற்குரிய தகுதியோ தராதரமோ இல்லை என்றும் தான் வெளியிலே இருந்து ஆரதிப்பதாகவும் கூறினார்.  அந்த தேவ ஊழியரோ மிகவும் வருந்தி அவரை அழைத்தார். இறுதியில் தேவாலய முற்றம்வரைக்கும் வருகிறேன் என்று சொல்லி உள்ளே வந்து முற்றத்தில் முழங்கால் படியிட்டு ஜெபித்தார். சமூதாய அந்தஸ்து என்ற பிரமை அவரை கட்டிப்போட்டதினால் அவர் அவ்விதமாக நடந்து கொண்டார்.

இந்தப் பிரமையானது அவரைமட்டுமல்ல பலரை பல வேறுபட்ட நிலைகளில் கட்டிவைத்துள்ளது.

பரிசுத்த வேதாகமத்திலே இயேசு கிறிஸ்து ஒருமுறை யூதர்களுடன் உரையாடிய போது நடந்தவற்றைப் பார்ப்போம்.

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணிய சிலihக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்: 

இரண்டு மனு~ர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்கு போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனு~ரைப்போலவும், இந்த ஆயக்காரனை ப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்ததிரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கின்றேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசம பாகம் செலுத்திவருகின்றேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். 

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பி ப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 

பரிசேயர் எனப்படுவோர் யூத சமூகத்திலே உயர் நிலையிலுள்ள பக்தி மான்கள் என்றும் ஆயக்காரர்கள் உரோம அரசிற்கு வரிசேர்ப்ப வர்களும் பாவிகளும் என்று தரப்படுத்தப்பட்டவர்கள். இயேசு சொன்னார், அத்தரப்படுத்துதல் தேவனுக்குரியதல்ல. இவ்வுலகத்தில் தகுதி, மேன்மை எனப்படுவது சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக அழுக்கும் குப்பையுமாயுள்ளது. அவற்றினால் எவரும் தேவனுக்கு முன்பாக தகுதி அடைவதில்லை. அவை இவ்வுலக வாழ்வோடு மறைந்து போகும். ஓருவனுக்கு தேவனால் உண்டாகும் தகுதியானது இவ்வுலகிலும் மோட்சத்திலும் அவனை மேன்மை ப்படுத்தும். அந்தத்தகுதி என்னவென்றால் தேவன் ஓருவனுடைய பாவங்களை மன்னித்து அவனை நீதிமானாக்குவதே. அப்போது அவன் தேவனுடையவனாகின்றான். தேவனும் அவனை ஆசீர்வதித்து நடத்துவார். 

பிரியமான சகோதரனே, சகோதரியே!

நீ தேவனால் தகுதி பெற்று அவருடையவனாய் அவருடையவளாய் வாழவேண்டும், இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது வாழ்க்கை யானது தேவனுக்கேற்றதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக் கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.”


போதகர் ரஞ்சிற் கொன் ஸ்ரன்ரைன் 


Pastor Ranjit Constantine
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH



Saturday, February 6, 2016

Wednesday, February 3, 2016

Tuesday, February 2, 2016

Tamil Christian Church in Toronto

Welcome to Grace Tabernacle Apostolic Church!

We are Tamil community based Pentecostal Christian Church located in Toronto, Ontario, Canada. All the are conducted in both; Tamil and English languages. Service is conducted at 207 Silver Star Blvd., Scarborough, Ontario.

For more information on our fundamental beliefs visit our website.