Tuesday, February 2, 2016

காலங்கள் - Time



மனிதர்களிடையே விஞ்ஞான அறிவு மிகவும் வளர்ந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியானது எல்லா துறைகளிலும் மிக வேகமாய் வளர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் எத்துறையில் தங்கள் கல்வியைத் தொடர்வது என்பது மிக முக்கிய மான ஓர் தீர்மானமாகக் காணப்படுகின்றது. இன்று பல துறைகளில் கல்வி அறிவு வளர்ந்துள்ளதே அதற்குக் காரணமாயுள்ளது. நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் புதிய புதிய ஆராய்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அகழ்வாராய் ச்சியினால் பல கடந்த கால நிகழ்வுகளையும் அவற்றின் காலங்க ளையும் கணித்துக் கூறுகின்றனர். தற்போதுள்ள காலத்தைக் குறித்து பேசுவோமானால், பலர் சலித்துக்கொள்ளும் சம்பவங்கள் அநேக முண்டு. கொலைகள், கொள்ளைகள், அழிவுகள், யுத்தங்கள் என பல துயர்கள் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன. 

பரிசுத்த வேதாகமத்திலே காலங்களைக் குறித்து சொல்லப்பட்டவைக ளைப் பார்ப்போம். 

காலத்தை உணராதவர்கள்

பரிசேயர் சதுசேயர் எனப்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்து அவரைத் தாங்கள் அறிந்து கொள்ளத்தக்கதாக வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் கேட் டார்கள். அவர்கள் மத்தியிலே அநேக காரியங்களை கர்த்தர் செய்திரு ந்தும் அவரை விசுவாசிக்க மனதில்லாமல்; அவihச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக் குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 

அவர்களுக்கு இயேசு பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வான மிட்டிருக்கிறது, அதனால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதய மாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றை க்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்கா ரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? (மத்தேயு 16)   

கடந்த காலங்களை ஆராய்கிறோம், அவற்கைக் குறித்து பேசுகிறோம். ஆனால் இப்போது நடைபெறுபவைகள் ஏன் நடைபெறுகின்றன?

ஒருமுறை கர்த்தரின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து ஜெருசலேம் தேவாலயத்தைக் காண்பித்து அதைக்குறித்துப் பேசினார்கள். அவை மிகப் பெரிதான பளிங்குக் கற்களினால் கட்டப்பட்டிருந்தது. (மத்தேயு 24) இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீ~ர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 

பின்பு, இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீ~ர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள். 

எப்போது ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்படும்? ஆம் அது இடிக்கப்பட்டது. கர்த்தர் சொன்னபடி காலம் நிறைவேறியது. சீஷர்கள், இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்றும் கேட்டார்கள் அதற்து அவர்:

“ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகih வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக் கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேத னைகளுக்கு ஆரம்பம்.” 

ஆம், கர்த்தர் சொன்ன காலம் சமீபமாயுள்ளது.  

பிரியமான சகோதரனே, சகோதரியே!

புதியதோர் சந்ததி வருகின்றது. மற்றோர் சந்ததி உலகத்தை விட்டு செல்கின்றது. மனிதன் இவ்வுலகில் வாழ்நாள் குறுகினவனாயுள்ளான். காலங்களும் கடந்து போகின்றது. தேவாதி தேவனை சந்திக்கத்த க்கதாக உனது வாழ்க்கை இருக்கின்றதா? உனக்கு ஆறுதல் தந்து உன் பாவங்களை மன்னிக்கும் இயேசு உன்னைத் அதற்குத் தகுதிப் படுத்துவார். நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளை யாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார்:

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”


கிறேஸ் ற்ரபனக்கல் அப்போஸ்தல சபை
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


gtachurchnet.com



சோர்ந்து போகாதே! Be of good courage!


சில வேளைகளிலே, இந்த உலகிலே எங்களை அழுத்தும் சுமைகளும், பற்றும் பாரங்களும், தேவன் எங்களை மறந்தாரே, கைவிட்டாரோ என்று சிந்திக்க தூண்டலாம். 

அந்த வேளைகளிலும் வேதத்தை ஊக்கமாக படியுங்கள், கருத்தோடு ஜெபம் பண்ணுங்கள். வாக்குத்தத்தங்களை அறிக்கையிட்டு, அவைகளை ஆசீரவர்தங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். 

பரிசுத்த வேதாகமத்திலே, தேவனுடைய என்றும் மாறாத ஜீவனுள்ள வார்த்தைகளை விசுவாசத்தோடு பற்றிக் கொள்ளுங்கள்.

வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

“சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள். உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.” ஏசாயா 49:13-19)

“யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.  இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40: 27-31)

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” (எபிரெயர் 12:1)

சோர்வுக்கு இடங்கொடாமல் விசுவாசத்தோடு ஒடுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் வாக்களித்ததை நிச்சயமாக நிறைவேற்றுவார். ஆமேன்!


கிறேஸ் ற்ரபனக்கல் அப்போஸ்தல சபை
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH



Thursday, January 28, 2016

சபையின் விசுவாச கோட்பாடுகள் - மூல உபதேசம்

அபோஸ்தல உபதேசம் 

1. தேவத்துவத்தின் ஒருமைப்பாடும் திரித்துவத்தின் உண்மையும் மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒரே தன்மையுடையவராய் திரியேகத்துவத்திள் இசைந்திருத்தல் (எண்ணாகமம் 6:22-27, ஏசாயா 6:3, மத்தேயு 3:16-17, மத்தேயு 28:19, யோவான் 15:26, யோவான் 5:7, லூக்கா 2:26, யோவான் 1:3, யோவான் 5:18-19, யோவான் 20:28, ரோமர் 8:9)

2. மனித சுபாவத்தின் முழுப்பாவத்தன்மை, மனந்திரும்பி மறுபிறப்பு அடைவதின் அவசியம், மனந்திரும்பாதவனின் இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்பு. (சங்கீதம் 51:5, மத்தேயு 25:41-46, யோவான் 3:3, 5:19, அப்போஸ்தல நடபடிகள் 2:38, 17:30, ரோமர் 3;:10-18, எபேசியர் 2:1-3, வெளிப்படுத்தல் 20:12-15, ஏசாயா 66:24)

3. நமது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, பாவமற்ற ஜீவியம், பிராயசித்த மரணம், உயிர்தெழுத்தலின் வெற்றி, பரமேறுதல், நமக்காக பரிந்து பேசுதல், இரண்டாம் வருகை, ஆயிரவருட அரசாட்சி (சகரியா 14:4, மத்தேயு 1:23, 24:30, 28:5-6, லூக்கா 1:35, யோவான் 14:30, 20:3-18, அப்போஸ்தலர் 1:9-11, ரோமர் 5:11, 1:4, பிலிப்பியர் 2:6-11, 1 தெசலோகிகேயர் 4:15-17, 2 கொரிந்தியர் 5:19, 1 தீமோத்தேயு 3:16, எபிரேயர் 2:17, 4:15, 7:25-26, 1 யோவான் 2:1, வெளிப்படுத்தல் 1:7, 20:1-15)

4. இயேசுக்கிறிஸ்துவின் முடிவற்ற ஊழியத்தின் பயனாக விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாகுதலும், பரிசுத்தமாகுதலும். (ரோமர் 3:24, 5:1-9, 6:6, 11-14, 8:33, 10:4, 1 கொரிந்தியர் 6:11, 2 கொரிந்தியர் 7:1, எபிரேயர் 10:10)

5. விசுவாசிகளுக்கு அடையாளங்களுடன் கூடிய பரிசுத்தாவியின் நிறைவு. (லூக்கா 3:16, 11:9-13, யோவான் 7:37-39, அப்போஸ்தலர் 1:4-5, 2:1-4, 38, 39, அப்போஸ்தலர் 10:46, 19:6, எபேசியர் 1:23, 4:12)

6. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பக்திவிருத்தி, பரிசுத்தம், ஆறுதலுக்கான பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள். (1 கொரிந்தியர் 12:4-11, 14:3, 12, 26, எபேசியர் 1:23, 4:12)

7. தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, ஆகிய ஞான அனுமானங்கள். (மத்தேயு 28:16, மாற்கு 16:16, லூக்கா 22:19, 20, அப்போஸ்தலர் 2:38, 8:12, 36-38, ரோமர் 6:3-7, 1 கொரிந்தியர் 10:15-22, 1 கொரிந்தியர் 11:23-32)

8. தெய்வீக அருளால் எழுதப்பட்ட வேத வசனமும், அதிகாரமும். (2 தீமோத்தேயு 3:16, 2 பேதுரு 1:21, லூக்கா 24:44, 1:1-4, 2 சாமூவேல் 23:2)

9. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர், மேய்ப்பர், போதகர், மூப்பர், உதவியாளர் இவர்களுக்கான சபையின் ஆளுகை. (அப்போஸ்தலர் 6:2, 3, 6, 13:1-3, 20:28, 2 கொரிந்தியர் 11:28, எபேசியர் 4:8-16, 1 தீமோத்தேயு 3:1-13, தீத்து, 1:5-9, எபிரேயர் 13:17, 1 பேதுரு 5:1-4, லூக்கா 6:13, ரோமர் 16:1)

10. கிருபையினின்று வீழ்ச்சியுறுதல் சாத்தியம் (ரோமர் 11:20-22, கொலேசேயர் 1:21-23, எபிரேயர் 6:4-6, 10:26-29, 38, 39, வெளிப்படுத்தல் 22:19, பிலிப்பியர் 2:12, 2 பேதுரு 2:4-22)

11. தசமபாகம் மனப்பூர்வமான காணிக்கை செலுத்துதல் (ஆதி 14:20, 28:22, நீதி 3:9-10, மல்கியா 3:10, 1 கொரிந்தியர் 9:6-7, எபிரேயர் 7:1-10)


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


வெள்ளி களிம்பாகுமோ?

வெள்ளி களிம்பாகுமோ?

பொன் மங்கிப் போகுமோ? பசும்பொன் மாறிப் போகுமோ? வெள்ளி களிம்பாகுமோ?

இஸ்ரவேல் தேவனை விட்டு பின்வாங்கி பாவ வழிகளில் சென்று தங்களைக் கெடுத்துக் கொண்ட போது அவர்கள் தேவனுடைய பாதுகாப்பை இழந்து போனார்கள். அவர்கள் வாழ்வில் துன்பங்களும் அழிவுகளும் பெருகியது. அந்த நிலைமையை குறித்து தேவனுடைய தீர்க்கதரிசியான ஏரேமியா கூறிய வார்த்தைகள்:

“ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. ஐயோ! தங்கத் துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.”

ஆம் அவர்களது மகிமை அவர்களை விட்டு போனது. அவர்களது மேன்மை அவர்களிடத்திலிருந்து அகற்றப்பட்டது. தங்கத்துக் கொப்பான வர்கள் மட்பாண்டங்களாய் எண்ணப்பட்டார்கள். இஸ்ரவேல் பாவ வழிகளில் சென்ற போது தேவன் தமது தீர்க்கதரிசியான ஏசாயா வினுடாக அவர்களைக் குறித்து:

“உன் வெள்ளி களிம்பாயிற்று, உன் திராட்சரசம் தண்ணீர்க் கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கி றார்கள், அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகின்றான், திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள், விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.” என்று கூறியுள்ளார்.

தங்கமே, தங்கமணியே என்று தாலாட்டிய பிள்ளைகள் ஏன் இப்படி யானார்கள்? கடவுளை நம்பித்தானே இருக்கிறேன். பின்ன ஏன் இப்படியாயிற்று? என்ற கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு.

சோம்பேறியாக உள்ளவன் சோம்பலின் அப்பத்தைக் புசிப்பான். அவனைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே இவ்விதமாய் கூறப்பட்டு ள்ளது.

“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.” என்றும் “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்ட த்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக் காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.” என்றும் கூறப்பட்டுள்ளது. அவனிடத்தில் வயலிருந்தும் வேலை செய்யாதவனாய் வாழ்கிறான். அவன் வாழ்வில் “அவன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் அவன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”

இன்று கடவுளை நம்பித்தானே இருக்கின்றேன் என்பவன், கருத்தோடு மெய்யான தேவனுக்கேற்றபடி வாழாவிட்டால் அப்படிப்பட்டவன் மேற் கூறப்பட்ட சோம்பேறியைப் போலவே காணப்படுகின்றான். அவனுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது. அவன் வாழ்க்கையானது காஞ்சொறி மூடிய நிலத்தைப் போலவும், இடிந்து போயுள்ள கற்சுவர் போலவுமிருக்கும்,

மனிதர்கள் தேவனை அறியவும், அவர்கள் பரிசுத்த வாழ்வை வாழவும், அவர்களை மோட்சத்தில்  சேர்க்கவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து சொன்னார் “நானோ அவர்களுக்கு (இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு) ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவர்களை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.”

தங்கத்திலும் மேலானதும் கிடைப்பதற்கரிய பொக்கிஷமான மனித வாழ்வு மங்கிப் போகாமலும் வாழ்வின் மேன்மை ஓங்கியிருக்கவும் தேவனுடைய திவ்விய வசனம் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயுள்ளது.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

பொன் மங்கிப் போயிற்றோ? பசும்பொன் மாறிப் போயிற்றோ? வெள்ளி களிம்பாயிற்றோ?

உன் பாவங்களை மன்னித்து உன் சாபங்களை நீக்கி உனக்கு புது வாழ்வு தந்து உன்னை புது மனிதனாய் மனுஷியாய் மாற்ற இயேசு இருக்கிறார். இன்று நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

போதகர் ரஞ்சிற் கொன் ஸ்ரன்ரைன் 
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH




Wednesday, January 27, 2016

அறுப்பு மிகுதி!

    இயேசு:
    அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். (லூக்கா 10:2 )

Tamil Bible Studies, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

இன்றைய உலகில் பிள்ளைகள், வாலிபர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்கிறார்கள். பெற்றோர் வேறு தேசத்திலே கல்வி கற்றதால், இங்கு பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவைகளை உண்டு பண்ணும் அடிப்படைக் காரணிகளையும் அறிய சிரமமாயிருக்கின்றது. அவற்றை அறிந்து கொண்டாலும், பல சமயங்களிலே, பிள்ளைகள் தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆகவே பிள்ளைகள் தங்கள் சூழ்நிலைகளை வெற்றிகொள்ள தேவ வழிடத்துதல் இன்றியமையாதது. 

தேவ வழிடத்தலை பெற்றுக்கொள்ள, பிள்ளைகள், சிறிய வயத்திலிருந்தே முறையான கிறிஸ்தவ பாடத்திட்டத்தின் படி பயிற்றப்பட வேண்டும். அந்தந்த வயதிற்குரிய சவால்களை எதிர் நோக்கி வெற்றி பெற, சரியான காலத்தில், தேவ காரியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி தேவ வழி நடத்தலை பெற்றுக் கொள்வது, எவை தேவனிடமிருந்து வருகின்றது, இவை இந்த உலத்தினால் திணிக்கபடுகின்றன என்பதை அறிய, முறையான பாடத்திட்டம் அடங்கிய வேதாகம பாடங்களை  ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றை மையமாக கொண்டு, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை(SUNDAY SCHOOL) வகுப்புகளை அமைத்துள்ளோம். நாலு (4) வயதிலிருந்து பதினெட்டு (18) வயதுவரை, முறையான வேதபாடங்களை கற்றுகொள்ள தேவையான புத்தகங்கள் பெற்றுக்கொள்வதில் நாங்கள் முதலீடு செய்கின்றோம். கரிசணையோடு கற்றுக்கொடுக்கும் தகுந்த ஆசிரியர்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம். 

தேவ காரியங்களை, பிள்ளைகளின் சிறிய வயதிலிருந்து கற்றுங் கொடுங்கள். 





Our Fundamental Beliefs

Fundamental Beliefs 

1. The one true and living God, who eternally exists in three persons in unity: Father, Son, and Holy Spirit.

 2. The divine inspiration and authority of Holy Scripture.

 3. The original perfection of creation; the inherent corruptness of humanity through the Fall; the necessity of repentance and regeneration by grace and through faith in Christ alone, and the eternal separation from God of the finally unrepentant.

 4. The Virgin Birth, sinless life, atoning death, triumphant resurrection, ascension and continuing intercession of our Lord Jesus Christ. His second coming and eternal kingdom reign.

 5. The Justification and sanctification of believers through the finished work of Christ, their security as they remain in Him and their future resurrection in an incorruptible body.

 6. The Sacraments of Baptism by immersion and of the Lord’s Supper.

 7. The Baptism of the Holy Spirit for believers with supernatural signs empowering the Church for its mission in the world.

 8. The gifts of the Holy Spirit for the building up of the Church and ministry to the world.

 9. Christ’s leadership of the Church through Apostles, Prophets, Evangelists, Pastors, Teachers and elders for the unity, maturity and growth of the Church.

 10. The privilege and responsibility of wise stewardship of that entire God has given, including the practice of tithes and offerings to the local church. 

11. Tithes and Freewill offering


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH